Tuesday, August 24, 2010

ஊசி போடவா.. வேண்டாமா..

சில தினங்களுக்கு முன், சித்த மருத்துவ பட்டதாரிகள் தங்கள் மருத்துவ முறையுடன் ஆங்கில மருந்துகளையும்(allopathy) உபயோகிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை ஏற்காத ஆங்கில மருத்துவர்களுக்கும் பொது மக்களுக்கும் சில விளக்கங்கள்.

 சித்த மருத்துவத்திற்கென பட்ட படிப்பு துவங்கும் காலகட்டத்தில் சித்த மருத்துவ பட்டதாரிகள் ஒரு முழுமை பெற்ற மருத்துவர்களாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கில மருத்துவ பாடங்களான anotomy, physiology, biochemistry, clinical pathology, pharmacology ..etc ஆகியவற்றை பாட திட்டத்தில் சேர்த்தார்கள். ஆகவே நாங்களும் முறையாக படித்தவர்கள், பயிற்சி பெற்றவர்கள்.

 மேலும் நாங்கள் முழுவதுமாக ஆங்கில மருத்துவ முறையில் பிரக்டீஸ் செய்யவில்லை. சில தருணங்களில் உதாரணமாக அதிகமான வலி, ஒவ்வாமை, (emargencg, shock, allergy, ureteric colic) போன்ற அவசர காலங்களில் மட்டும் அலோபதி மருந்துகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.

 நமது நாடு பெரும்பகுதி கிராமங்களால் ஆனது. ஆனால் கிராமங்களுக்கு மருத்துவ வசதி சரியாக கிடைப்பதில்லை. அலோபதி மருத்துவர்கள் நகரங்களையே நாடுகிறார்கள். நாங்கள் பெரும்பாலும் கிராமங்களில் சேவை செய்கிறோம்.

 இத்தனை நியாயங்கள் எங்களிடம் இருந்தும் ஏற்காத IMA தரப்பினர் அடுத்த உள்குத்துகளை துவங்கியிருக்கிறார்கள். ..உங்கள் நோக்கம் தான் என்ன?..
 ஐந்தரை வருடம் மருத்துவ கல்லூரியில் படித்த எங்களை போலி மருத்துவர் என்று போலீஸ் மூலம் கைது செய்தீர்கள். பல போராட்டங்களுக்கு பிறகு மீண்டு வந்தோம். மறுபடியுமா!....வேண்டாம் ..இத்தோட நிறுத்தி கொள்வோம்..
 ( ரொம்ப சீரியசா எழுதீட்டமோ !..........)

 இந்த பிரச்சனைகளால் மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளான Dr.அருண் ஒரு யோசனை சொன்னார். நந்தி மை, ரசகந்தி மெழுகு, போன்ற எங்கள் மருந்துகளை உங்களுக்கு தருகிறோம். பதிலாக diclo, paracitamol, மற்றும் சில antibiotics களை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம். (..உக்காந்து யோசித்திருப்பாரோ?..) இதிலிருந்து அவரது மனநிலை பாதிப்பை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
 ..........பட்...இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

 கடைசியாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். ஜெயிலுக்கெல்லாம் போயிட்டு வந்திருக்கிறோம். கொஞ்சம் பாத்து போட்டு கொடுங்க!........

இதை படிக்கும்  சித்த மருத்துவர்கள்  ஓட்டு போட்டு இந்த பதிவை மற்றவர்களும் படிக்கும் படி செய்யவும்

1 comment:

  1. மச்சான்..உங் குசும்பு எழுத்து குதூகலமாக்கிடிச்சு. பட்...அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு..ரொம்ப சூப்பர்!
    ரண்டு மூனு அலோபதி ஃபிகருக்கு அனுப்பியிருக்கேன். ஏதோ என்னாலே முடிஞ்சுது!

    ReplyDelete